உன்னைப் பார்க்கும்வரை
மழையின் மைந்தனாய் இருந்தேன்
அருவியின் தோழனானேன்
நதியாய் நடந்தேன் கடல் நோக்கி
அருவியைக் கொளுத்தும்
தீக்குச்சியோடு நீ வந்தாய்
என் கடல் வற்றியது
நீருபூத்த நெருப்பாய்
உன் ஞாபகங்கள் உள்ளுக்குள்
கனலத் தொடங்கின
எனக்கே தெரியாமல்
என் மனத்திரி கிள்ளி
நெருப்பு வைத்தாய்
மழையின் மைந்தன்
தனலில் கரைந்தேன்
தனல் உறங்கச் செல்லும்
ஒரு நாளில்
பருவ மழை வருமென
செய்தி வந்தது
பருவமழை பல கடந்தும்
அருவியைக் கொளுத்தும்
தீக்குச்சியோடு
நீ வருவாய் என தெரியும்