அம்மாவைப் பிரிந்து
பாட்டியுடன் ஊருக்குப் போகும்
இரண்டு பெண் குழந்தைகள்
பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தன
ஒன்று அழுது கொண்டிருந்தது
மற்றொன்று சம்சா தின்று கொண்டிருந்தது
பேருந்து நிலையத்தில் திரிந்த
அநாதை மாடு ஒன்று குழந்தைகளை
முட்டுவது போல வந்து விலகிச் சென்றது
முதல் குழந்தை அழுகையை நிறுத்தியது
சம்சா குழந்தை அழத் தொடங்கியது