வெள்ளி, 26 ஜூன், 2009
இசை வேந்தனுக்கு ஒரு புகைப்பட அஞ்சலி
இன்னும் நட்சத்திரம் இருளவில்லை

(இந்த வார ஆனந்த விகடனில் வந்த தணிகைச் செல்வனின் 'இன்னும் நட்சத்திரம் இருளவில்லை' என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. இதோ உங்களுக்கும்...)
கடலோரம் பெருவனங்கள்
கரைநெடுக நெடுமரங்கள்
படல்வீடே ஈழமுகம்
பண்பாடே ஈழநிலம்
படகெல்லாம் மீன்கள்வளம்
படுகரையில் உப்பின்அளம்
குடிதோறும் தென்னைவளம்
குறும்பலா தரைதவழும்
கரையோரம் நெய்தல்நிலம்
கரைதாண்டி முல்லைவளம்
மருதநிலம் நடுநாடு
மணமணக்கும் வயற்காடு
பழந்தமிழர் கொல்லையெலாம்
பனைமரங்கள் எல்லைகளாம்
பழம்பதியின் முதற்குறியே
பனைமரத்தின் முகவரியே
நான்குநிலம் கொண்டதனால்
நானிலமே எமதீழம்
நன்னிலத்தில் நெல்வாழை
கன்னலுக்குக் கரும்பாலை
நான்குநிலம் கொடுங்கோலாய்
அஞ்சு(ம்)நிலம் ஆனகதை
ஈழயினம் சிங்களத்தால்
ஏழையினம் ஆனகதை
அஞ்சும்நிலம் தடைமீறி
மிஞ்சிநின்ற வேரின்கதை
சிங்கத்தை வேங்கையினம்
சீரிநின்ற போரின்கதை
ஞாலமெல்லாம் எம்மினத்தை
நடுக்களத்தில் விற்றகதை
ஓலமிட்டு லட்சம்பேர்
உலைக்களத்தில் வெந்தகதை
கண்ணுள்ளார் காணவில்லை
காதுள்ளார் கேட்கவில்லை
குழந்தைகளை மீட்கவில்லை
குமரிகளைக் காக்கவில்லை
வாதை தடுப்பதற்காய்
வேண்டினோம் டெல்லிக்கொடி
வதையை நிறுத்திவிட
வணங்குகிறோம் தொப்புள்கொடி
எக்கொடியும் வரவில்லை
இக்கொடியர் போர்நிறுத்த
வக்கரித்த தேர்தலிலே
வாக்களித்த தமிழர்களே
மீளவும்யாம் எண்ணுகையில்
நாளைஉயிர் யார்கையில்?
ஈழம்இன்று நிலச்சிறையாய்
வேலியிட்ட வெளிக்கடையாய்...
ஒருகுவளை நீருக்கும்
ஒருகவளம் சோற்றுக்கும்
எம்நிலத்தில் கையேந்தி
எம்குலத்தோர் வேகையிலும்
நம்பிக்கை தளரவில்லை
நட்சத்திரம் இருளவில்லை
தம்பிக்கை உயிர்த்தெழும்பும்
சரித்திரத்தைப் பெயர்த்தெழுதும்!
- தணிகைச்செல்வன்
வியாழன், 21 மே, 2009
புலி தலைவர் உயிருடன் இருக்கிறார்

தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித் துள்ளார்.
இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.
தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.
இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது.
பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.
prabhakaran-maskதண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.
சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.
தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். இச்செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதன், 20 மே, 2009
பத்துத் தடவை பாடை வராது

பத்துத் தடவை பாடை வராது
பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா
செத்து மடிதல் ஒரேஒரு முறைதான்
சிரித்துக் கொண்டே செருக்களம் வாடா!
முத்தமிழோடு மோதினார் பகைவர்
முடங்கிக் கிடப்ப தென்ன நீதி
குத்தும் கணைகள் குண்டுகள் வரட்டும்
குருதி பெய்யடா! கொட்டும் முரசே!!
ஆற்றல் அடையாய்! ஆண்மைத் தமிழனே
அடநீ என்னடா அடங்கி நின்றனை
சோற்றுப் பானையும் நாமும் ஒன்றோ?
சும்மா வயிறு நிரப்பவோ வந்தோம்?
மாற்று வீரன் மருளத் தமிழன்
மானப்போர் செய்திட மாட்டானோ?
நாற்றிசையும் நடுங்க எழடா!
நடந்துபோ செங்குருதி நடுவிலே!
அன்னைத் தமிழோ அழுது கிடந்தார்!
அருந்தமிழ் நாடோ அழுந்திக் கிடந்தது
முன்னைச் சேர சோழ பாண்டியர்
மூச்சு முடிந்து போச்சோ தமிழா?
உன்னைத் தமிழனாகப் பெற்றாள்
ஊட்டி வளர்த்த முலைப்பால் எங்கடா?
தென்னைக் குலைகள் என்னப் பகைவர்
சென்னி திருகடா! செருவில் எழுகவே!
விடுதலை என்ன மலிவு விலையோ?
வீதிக்கடையில் விற்பனைக் குண்டோ?
புடலங்காயோ விடுதலை?
போடா!
போர்க்களம் ஆடப்போ! அதுகிடைக்கும்!
கொடுவிலையாகக் குருதியும் ஆவியும்
கொடடா உன்தலை ! கொள்க விடுதலை!
அடநாம் மானத் தமிழர் அல்லவோ!
ஆளப் பிறந்தோம்......ஆடடா களத்தே...




.jpg)